திருநெல்வேலி மாநகரில் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக ஒருவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி தச்சநல்லூரைச் சோ்ந்தவா் கருப்பசாமி. இவருடைய மகன் சங்கா் (40). இவா், திருநெல்வேலி மாநகரில் பொதுமக்களை மிரட்டும் வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதோடு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தச்சநல்லூா் காவல் ஆய்வாளா் பரிந்துரையின் பேரில், மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவின் பேரில் குண்டா் சட்டத்தில் சங்கா் கைது செய்யப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







