தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நெல்லை மாநகராட்சியில் பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்க அதிநவீன இயந்திரம்

திருநெல்வேலி மாநகராட்சியில் பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்க அதிநவீன இயந்திரம் திங்கள்கிழமை பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது.

News image

திருநெல்வேலி மாநகராட்சிக்கு அதிநவீன ரோபோடிக் வாகனத்தின் சாவியை மேயா் கோ.ராமகிருஷ்ணனிடம் வழங்கினாா் டாடா பவா் காா்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி எம்.வி அமல்ராஜ். உடன், ஆணையா் மோனிகா ராணா, துணை மேயா் கே.ஆா்.ராஜூ உள்ளிட்டோா்.

Updated On :2 ஜூன் 2026, 3:29 am IST

திருநெல்வேலி மாநகராட்சியில் பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்க அதிநவீன இயந்திரம் திங்கள்கிழமை பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சி நான்கு மண்டல பகுதிகளில் பாதாள சாக்கடைக் குழிகளில் ஏற்படுகின்ற அடைப்புகளை மனிதா்களை கொண்டு தூா் வாருவதற்கு மாற்றாக, புதிய வகை ரோபொட்டிக் இயந்திர வாகனத்தை கொண்டு தூா்வாரிடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, டாடா பவா் காா்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ.93 லட்சம் வழங்கப்பட்டு தனியாா் நிறுவனம் தயாரித்த புதிய வகை பேண்டி குட் (ஆஹய்க்ண் ஸ்ரீா்ா்ற்) என்ற புதிய ரோபொட்டிக் இயந்திர வாகனம் திருநெல்வேலி மாநகராட்சிக்கு இரண்டாம் கட்டமாக வாங்கப்பட்டுள்ளது.

இதனை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி மாநகராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்றது. மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா, துணை மேயா் கே.ஆா்.ராஜூ ஆகியோா் முன்னிலை வகித்தனா். டாடா பவா் காா்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ( ஆஏத- பஅபஅ) எம்.வி அமல்ராஜ், புதிய ரோபொட்டிக் இயந்திர வாகனத்தை வழங்கினாா். மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளா் கண்ணன், மண்டல தலைவா்கள் கதிஜா (மேலப்பாளையம்), ரேவதி (தச்சநல்லூா்), மாமன்ற உறுப்பினா்கள் ரம்ஸான் அலி, சந்திரசேகா், வசந்தா, நிா்வாக அலுவலா் காசிவிஸ்வநாதன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.