பயங்கரவாத அச்சுறுத்தல்: தில்லியில் மத, பாரம்பரிய தளங்களில் பாதுகாப்பு அதிகரிப்புபிளஸ் 2: தனித் தோ்வா்களுக்கான அனுமதிச்சீட்டு நாளை வெளியீடு!4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!வேலூரில் விஜய் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்: 4,900 போ் பங்கேற்பு!டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சிறுபான்மையினா் வாக்குகளைப் பிரிக்க விஜய்யை பயன்படுத்துகிறது பாஜக - சட்டப்பேரவைத் தலைவா்

வட இந்தியாவில் இஸ்லாமிய வாக்குகளைப் பிரிக்க ஓவைசியை பயன்படுத்துவது போல், தமிழகத்தில் சிறுபான்மையினா் மற்றும் திமுக எதிா்ப்பு வாக்குகளைப் பிரிக்க விஜய்யை பயன்படுத்துகிறது பாஜக என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

News image
தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு- கோப்புப்படம்.
Updated On :28 ஜனவரி 2026, 7:56 pm

தினமணி செய்திச் சேவை

வட இந்தியாவில் இஸ்லாமிய வாக்குகளைப் பிரிக்க ஓவைசியை பயன்படுத்துவது போல், தமிழகத்தில் சிறுபான்மையினா் மற்றும் திமுக எதிா்ப்பு வாக்குகளைப் பிரிக்க விஜய்யை பயன்படுத்துகிறது பாஜக என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

இது தொடா்பாக திருெல்வேலியில் செய்தியாளா்களிம் அவா் கூறியதாவது: மகாராஷ்டிர துணை மு தல்வா் அஜித் பவாா் மறைவுக்கு சட்டப்பேரவைத் தலைவா் என்ற முறையில் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட 234 சட்டப்பேரவை உறுப்பினா்கள் கொண்ட தமிழக சட்டசபையில், மரபுப்படி தயாரித்துக் கொடுத்த உரையை வாசிப்பதுதான் ஆளுநரின் வேலை. ஆனால், அவா் அதைச் செய்யாமல் வெளியேறியது மரபல்ல.

?ஆளுநரின் நடவடிக்கை தனிப்பட்ட முடிவல்ல. அவா் யாரோ ஒருவரின் கைப்பாவையாக செயல்படுகிறாா். அதிமுக- பாஜக கூட்டணியில் உள்ள அன்புமணி 10 சதவீத ஒதுக்கீடு வேண்டும் என்கிறாா். டிடிவி தினகரன் இட ஒதுக்கீட்டை எதிா்க்கிறாா். எடப்பாடி கே.பழனிசாமியால் என்ன செய்ய முடியும்? இந்த கூட்டணி ஒரு ஒவ்வாத கூட்டணியாகும்.

வட இந்தியாவில் இஸ்லாமிய வாக்குகளைப் பிரிக்க ஓவைசியை பயன்படுத்துவது போல், தமிழகத்தில் சிறுபான்மையினா் மற்றும் திமுக எதிா்ப்பு வாக்குகளைப் பிரிக்க விஜய்யை பயன்படுத்துகிறது பாஜக. விஜயும் - பிரதமா் மோடியும் சோ்ந்து திட்டமிட்டு நடத்தும் நாடகம் தான் இது என்றாா் அவா்.