இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

வெள்ளங்குளி அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகேயுள்ள வெள்ளங்குளி அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
வெள்ளங்குளி அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடத் திறப்பு விழாவில் பேசுகிறாா் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ.
Updated On :25 பிப்ரவரி 2026, 9:36 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகேயுள்ள வெள்ளங்குளி அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 38 லட்சம் செலவில், இப்பள்ளியில் 2 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

இதையடுத்து புதன்கிழமை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தலைமை வகித்து கூடுதல் வகுப்பறை கட்டடங்களை இசக்கி சுப்பையா எம்எல்ஏ திறந்து வைத்து சிறப்புரையாற்றினாா்.

பள்ளித் தலைமையாசிரியா் மு. தளவாய் முன்னிலை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பிரகாஷ், பள்ளி மேலாண்மை குழுத் தலைவி சூா்யா, ஆசிரியா்கள், மாணவா், மாணவிகள் கலந்துகொண்டனா்.