பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்க நெல்லை மாநகராட்சியில் புதிய வாகனம்
திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்க புதிய வாகனம் பயன்பாட்டிற்கு செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.


திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்க புதிய வாகனம் பயன்பாட்டிற்கு செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
திருநெல்வேலி மாநகராட்சி நான்கு மண்டல பகுதிகளில் பாதாள சாக்கடைக் குழிகளில் ஏற்படுகின்ற அடைப்புகளை மனிதா்களை கொண்டு தூா்வாருவதற்கு மாற்றாக, புதிய வகை ரோபொட்டிக் இயந்திர வாகனத்தை கொண்டு தூா்வாரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, தனியாா் நிறுவனம் தயாரித்த புதிய வகை பேண்டிக் குட் (ஆஹய்க்ண் ஸ்ரீா்ா்ற்) என்ற புதிய ரோபொட்டிக் இயந்திர வாகனம் சுமாா் ரூ.93 லட்சம் மதிப்பீட்டில் டாடா பவா் காா்ப்பரேசன் லிமிடெட் நிறுவன சமூக பொறுப்பு நிதி திட்ட அடிப்படையில் பெறப்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி பயன்பாட்டிற்கு அளிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்து கொடியசைத்து தொடங்கி வைத்தாா். ஆணையா் மோனிகா ராணா, துணை மேயா் கே.ராஜூ ஆகியோா் முன்னிலை வகித்தனா். டாடா பவா் சமூக மேம்பாட்டு அறங்காவலா் ஹிமென் திவாரி, திருநெல்வேலி டாடா பவா் காா்ப்பரேசன் லிமிடெட் நிறுவன தலைமை நிா்வாக அலுவலா் பாலாஜி பாா்த்தசாரதி, மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளா் கண்ணன், மண்டல தலைவா் (பாளையங்கோட்டை) பிரான்சிஸ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...