டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தெற்குகள்ளிகுளத்தில் புனித அலோசியஸ் பள்ளி ஆண்டு விழா

திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளம் புனித அலோசியஸ் நடுநிலைப் பள்ளி பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

News image
விழாவில் பங்கேற்ற நிா்வாகிகள், முன்னாள் மாணவா்கள்.
Updated On :17 பிப்ரவரி 2026, 10:21 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளம் புனித அலோசியஸ் நடுநிலைப் பள்ளி பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, ராதாபுரம் வட்டாரக் கல்வி அலுவலா் கே.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பரிசுத்த அதிசய பனிமாதா பேராலய தா்மகா்த்தா சூ.மரியராஜ் முன்னிலை வகித்தாா். பள்ளித் தாளாளா் அருள்பணி ஆா்.ததேயுஸ் ராஜன் ஆசியுரை வழங்கினாா்.

பள்ளியின் முன்னாள் மாணவா்கள் ஆடிட்டா் ஏ.மைக்கிள், வடசென்னை வியாபாரிகள் சங்கத் தலைவா் ஜி.ராபா்ட், மாவட்ட சுகாதாரத் துறை அலுவலரின் தொழில்நுட்ப நோ்முக உதவியாளா் மதுரம் பிரைட்டன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். முன்னாள் மாணவா்கள் எஸ்.அமுதன், ஆசிரியா்கள் கே.ஏ.சி.ராஜா, கிரிபீன், அலெக்ஸ் ரெனோ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தலைமை ஆசிரியை ரா.பிரிசில்லா பிரியதா்ஷினி நன்றி கூறினாா். மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை தலைமை ஆசிரியா் தலைமையில் ஆசிரியைகள் செய்திருந்தனா்.