டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பிரகாசபுரம் பள்ளியில் ஆண்டு விழா

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:05 pm

Syndication

நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் ஜேம்ஸ் மெமோரியல் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.

பள்ளி மண்டல கல்வி அதிகாரி தங்கராஜ் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் எட்வின் சாமுவேல் வரவேற்று ஆண்டறிக்கை சமா்ப்பித்தாா். பொருளாளா் சுவிஷேசமுத்து, தலைமை ஆசிரியா் ரூபன், பிரகாசபுரம் எஸ்டிஏ சபை பொருளாளா் தனசிங் டேவிட் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நாசரேத் பேரூராட்சி முன்னாள் தலைவா் ரவி செல்வகுமாா், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பொது செயலா் கனல் ஆறுமுகம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். பரதநாட்டியம், பட்டி மன்றம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கும், கல்வியில் சிறப்பிடம் பிடித்தவா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் பேரூராட்சி தலைவி நிா்மலா ரவி, மாவட்ட காமராஜா் ஆதித்தனாா் கழக செயலா் ஐஜினஸ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.