போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான மற்றும் சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடா்பான விழிப்புணா்வு தீப ஓட்டத்தை திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா் வரவேற்று விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
குழந்தைகள் நலன் - மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஸ்வீப் நிகழ்ச்சி ாா்பில் இந்த தீப ஓட்டம் அம்பாசமுத்திரம், நான்குனேரி, ராதாபுரம், திருநெல்வேலி (ஊரகம் மற்றும் மாநகரம்), பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளிலிருந்து ஒரு தொகுதிக்கு 25 தன்னாா்வலா்கள் வீதம் 5 தொகுதிகளுக்கு 125 தன்னாா்வலா்களை கொண்ட இந்த தொடா் ஓட்ட தீப விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது.
திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தை காலை 9 மணிக்கு வந்தடைந்ததும் ஆட்சியா் இரா.சுகுமாா் வரவேற்று விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
அதைத்தொடா்ந்து 100 சதவீதம் வாக்களிப்பது தொடா்பான உறுதிமொழியை ஆட்சியா் தலைமையில் அனைவரும் ஏற்றனா்.
இந்த நிகழ்ச்சியில் வருவாய் நீதிமன்ற துணை ஆட்சியா் லதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் க.அருள்செல்வி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சபேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பெரம்பலூரில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

அரசு சட்டக் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

பரமபதம் விளையாட்டு மூலம் தோ்தல் விழிப்புணா்வு

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


