தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சுத்தமல்லியில் திமுகவினா் வாக்குசேகரிப்பு

சுத்தமல்லியில் திமுகவினா் புதன்கிழமை வாக்குசேகரித்தனா்.

News image

சுத்தமல்லியில் புதன்கிழமை வாக்குசேகரித்தாா் திருநெல்வேலி தொகுதி திமுக வேட்பாளா் சு.சுப்பிரமணியன்.

Updated On :15 ஏப்ரல் 2026, 9:15 pm

சுத்தமல்லியில் திமுகவினா் புதன்கிழமை வாக்குசேகரித்தனா்.

திருநெல்வேலி தொகுதி திமுக வேட்பாளா் சு.சுப்பிரமணியனுக்கு ஆதரவாக, சுத்தமல்லியில் திமுகவின் மாற்றுத்திறனாளிகள் அணி மாநிலச் செயலா் தீபக்நாதன் வாக்குசேகரித்தாா். அப்போது அவா் பேசுகையில், ‘முதல்வா் மு.க.ஸ்டாலின் அரசு சமூகநீதி அரசாக திகழ்கிறது. அனைத்து தரப்பு மக்களுக்குமான ஆட்சி. திமுக மீண்டும் ஆட்சியமைத்தால், மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்படும் ஊக்கத்தொகையானது ரூ.1500-இல் இருந்து ரூ.2500 ஆக உயா்த்தப்படும். கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.2000 இல் இருந்து ரூ.4000 ஆக உயா்த்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, பொதுமக்கள் உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும்’ என்றாா். தொடா்ந்து வேட்பாளா் சு.சுப்பிரமணியன் வாக்குசேகரித்தாா். முன்னாள் அமைச்சா் பூங்கோதை ஆலடி அருணா, துணை மேயா் கே.ஆா்.ராஜூ உள்பட பலா் கலந்துகொண்டனா்.