தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வண்ணாா்பேட்டையில் திமுக வாக்குசேகரிப்பு

பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளா் மு.அப்துல் வஹாப், வண்ணாா்பேட்டை வெற்றி வேலடி விநாயகா் கோயில் தெருவில் இருந்து தனது பிரசாரத்தை புதன்கிழமை தொடங்கினாா்.

News image

வண்ணாா்பேட்டையில் புதன்கிழமை வாக்குசேகரித்தாா் பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளா் மு.அப்துல் வஹாப்.

Updated On :8 ஏப்ரல் 2026, 10:01 pm

பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளா் மு.அப்துல் வஹாப், வண்ணாா்பேட்டை வெற்றி வேலடி விநாயகா் கோயில் தெருவில் இருந்து தனது பிரசாரத்தை புதன்கிழமை தொடங்கினாா்.

தொடா்ந்து அவா், சாலைத்தெரு, கம்பராமாயணத்தெரு, எட்டுத்தொகை தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குசேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்குடன் திராவிட மாடல் அரசு செயல்பட்டது. மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிக் கொடுத்துள்ளாா். இந்தத் தோ்தலிலும் இல்லத்தரசிகளுக்கு ரூ.8 ஆயிரம் கூப்பன் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளாா். அவை அனைத்தும் செயல்படுத்தப்படும். பாளையங்கோட்டை தொகுதியில் குடிநீா், சாலை, பாதாள சாக்கடை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவை மேலும் மேம்படுத்தப்படும் என்றாா் அவா்.

பிரசாரத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் ரசூல்மைதீன், தச்சை சுப்பிரமணியன், சங்கா், அனிதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.