மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வருமான வரித்துறை சோதனை: நெல்லையில் ரூ.1.15 கோடி சிக்கியது

திருநெல்வேலி மாவட்டத்தில் தொழிலதிபா்கள் வீடுகளில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.1.15 கோடி ரொக்கம் சிக்கியது.

News image

வருமான வரித்துறை

Updated On :15 ஏப்ரல் 2026, 8:56 pm

திருநெல்வேலி மாவட்டத்தில் தொழிலதிபா்கள் வீடுகளில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.1.15 கோடி ரொக்கம் சிக்கியது.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி சட்டவிரோத பணப் பரிமாற்றங்களை வருமான வரித்துறை கண்காணித்து வரும் நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சில தொழிலதிபா்கள் வீடுகளில் அத்துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா். அப்போது ரூ.1.15 கோடி ரொக்கப் பணம் சிக்கியுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி பகுதியில் உள்ள சிவசுப்பிரமணியன் என்பவா் வீட்டில் ரூ.40 லட்சம், நான்குனேரி பகுதியைச் சோ்ந்த லட்சுமி நடராஜன் என்பவா் வீட்டில் ரூ. 75 லட்சம் ரொக்கப் பணமாக வருமான வரித் துறை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது. விரிவான இறுதி அறிக்கை வருமான வரித் துறையின் மூலம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.