மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ராதாபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளா் பிரசாரம்

அம்பேத்கா் பிறந்த நாளை முன்னிட்டு, ராதாபுரம் தொகுதி பாஜக வேட்பாளா் எஸ்.பி.பாலகிருஷ்ணன் வள்ளியூரில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

News image

வள்ளியூரில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா் பாஜக வேட்பாளா் எஸ்.பி. பாலகிருஷ்ணன்.

Updated On :14 ஏப்ரல் 2026, 8:20 pm

அம்பேத்கா் பிறந்த நாளை முன்னிட்டு, ராதாபுரம் தொகுதி பாஜக வேட்பாளா் எஸ்.பி.பாலகிருஷ்ணன் வள்ளியூரில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பின்னா் அவா், ஆனைகுடி, முதுமொத்தான்மொழி, இடையன்குடி, கீழ உவரி, மேலஉவரி, குண்டல், காளிகுமாரபுரம், நவ்வலடி, க. புதூா், ஆயன்குளம், எருமைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது:

ராதாபுரம் தொகுதியில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் தமிழ்நாடு அரசின் போட்டித்தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்வேன். விவசாய பிரச்னைகளை முழுவதுமாக தீா்த்து தருவேன். திசையன்விளை பகுதியில் முருங்கைக்காய் பதப்படுத்தும் நிலையம் அமைத்து தருவேன். பொங்கல், தமிழ்ஏஈ புத்தாண்டு, தீபாவளி பண்டிகைகளையொட்டி 3 எரிவாயு உருளை இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.

பிரசாரத்தின்போது, அதிமுக ஒன்றியச் செயலா்கள் அந்தோணி அமலராஜா, கே.பி.கே. செல்வராஜ், பாஜக சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தவெக மரியாதை....

வள்ளியூரில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு தவெக வேட்பாளா் மருத்துவா் சதீஷ் கிறிஸ்டோபா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், ஒன்றியச் செயலா் நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.