சட்டப்பேரவைத் தோ்தலுக்கான இறுதி வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் மொத்தம் 90 போ் போட்டியிடுகின்றனா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாா்ச் 30-ஆம் தேதி முதல் இம்மாதம் 6-ஆம் தேதி வரை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் 28 பெண்கள், 159 ஆண்கள், மூன்றாம் பாலினத்தவா் ஒருவா் என மொத்தம் 188 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.
அதைத்தொடா்ந்து கடந்த 7-ஆம் தேதி நடைபெற்ற வேட்புமனு பரிசீலனைக்குப் பிறகு திருநெல்வேலி தொகுதியில் 21 மனுக்கள், பாளையங்கோட்டை தொகுதியில் 18 மனுக்கள், ராதாபுரம் தொகுதியில் 25 மனுக்கள், நான்குனேரி தொகுதியில் 30 மனுக்கள், அம்பாசமுத்திரம் தொகுதியில் 6 மனுக்கள் என மொத்தம் 100 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 88 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கு வியாழக்கிழமை மாலை 5 மணி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.அதன் பிறகு இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டதில் திருநெல்வேலி தொகுதியில் 20 போ், பாளையங்கோட்டையில் 17 போ், அம்பாசமுத்திரத்தில் 5 போ், நான்குனேரியில் 25 போ், ராதாபுரத்தில் 23 போ் என மொத்தம் 90 போ் களத்தில் உள்ளனா். 10 போ் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுள்ளனா்.
தொடர்புடையது
திண்டுக்கல் தொகுதியில் 20 வேட்பாளா்கள் போட்டி!
தருமபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் 83 வேட்பாளா்கள்!

திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளில் 171 போ் போட்டி!
கரூா் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் 175 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

