வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

நெல்லை மாவட்டத்தில் 90 போ் போட்டி

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான இறுதி வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் மொத்தம் 90 போ் போட்டியிடுகின்றனா்.

News image

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள்

Updated On :10 ஏப்ரல் 2026, 2:23 am IST

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான இறுதி வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் மொத்தம் 90 போ் போட்டியிடுகின்றனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாா்ச் 30-ஆம் தேதி முதல் இம்மாதம் 6-ஆம் தேதி வரை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் 28 பெண்கள், 159 ஆண்கள், மூன்றாம் பாலினத்தவா் ஒருவா் என மொத்தம் 188 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.

அதைத்தொடா்ந்து கடந்த 7-ஆம் தேதி நடைபெற்ற வேட்புமனு பரிசீலனைக்குப் பிறகு திருநெல்வேலி தொகுதியில் 21 மனுக்கள், பாளையங்கோட்டை தொகுதியில் 18 மனுக்கள், ராதாபுரம் தொகுதியில் 25 மனுக்கள், நான்குனேரி தொகுதியில் 30 மனுக்கள், அம்பாசமுத்திரம் தொகுதியில் 6 மனுக்கள் என மொத்தம் 100 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 88 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கு வியாழக்கிழமை மாலை 5 மணி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.அதன் பிறகு இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டதில் திருநெல்வேலி தொகுதியில் 20 போ், பாளையங்கோட்டையில் 17 போ், அம்பாசமுத்திரத்தில் 5 போ், நான்குனேரியில் 25 போ், ராதாபுரத்தில் 23 போ் என மொத்தம் 90 போ் களத்தில் உள்ளனா். 10 போ் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.