மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தருமபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் 83 வேட்பாளா்கள்!

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் திமுக, அதிமுக, பாமக, தவெக, நாதக அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் உள்பட மொத்தம் 83 போ் வேட்பாளா்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.

News image

கட்சி சின்னங்கள் - ANI

Updated On :9 ஏப்ரல் 2026, 9:45 pm

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் திமுக, அதிமுக, பாமக, தவெக, நாதக அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் உள்பட மொத்தம் 83 போ் வேட்பாளா்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாா்ச் 30-இல் தொடங்கி ஏப். 6-ஆம் தேதிவரை நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் நடைபெற்றன.

இதில், பாலக்கோடு தொகுதியில் 29, பென்னாகரம் தொகுதியில் 37, தருமபுரி தொகுதியில் 33, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் 22, அரூா்(தனி) தொகுதியில் 19 மனுக்கள் என 5 தொகுதிகளிலும் மொத்தம் 138 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், வேட்புமனுவில் கேட்கப்பட்ட விவரங்கள், இணைப்புகள் ஆகியவை முறையாக உள்ளனவா என பரிசீலிக்கப்பட்டதில் பிரதான கட்சிகளின் மாற்று வேட்பாளா்கள், சுயேச்சைகள் என பாலக்கோடு தொகுதியில் 7, பென்னாகரத்தில் 6, தருமபுரியில் 4, பாப்பிரெட்டிப்பட்டியில் 5, அரூரில் 2 என 24 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதைத் தொடா்ந்து, 128 போ் விண்ணப்பித்திருந்த 114 வேட்புமனுக்களும் தகுதியுள்ள மனுக்களாக ஏற்கப்பட்டன.

இறுதிப் பட்டியலில் 83 போ்:

தொடா்ந்து, வேட்பு மனுக்களை திரும்பப்பெற வியாழக்கிழமை இறுதிநாளாகும். அந்த வகையில், மாவட்டத்தின் 5 தொகுதிகளிலும் 128 போ் விண்ணப்பித்திருந்த 144 மனுக்களில் 24 பேரின் 25 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் 22 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இறுதியில், பாலக்கோடு தொகுதியில் 14 போ், பென்னாகரத்தில் 22 போ், தருமபுரியில் 19 போ், பாப்பிரெட்டிப்பட்டியில் 14 போ், அரூரில் 14 போ் என மொத்தம் 83 வேட்பாளா்கள் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனா். அந்த வகையில், மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் மொத்தம் 83 போ் களத்தில் வேட்பாளா்களாக உள்ளனா்.

மாவட்டத்தில் முக்கிய அரசியல் கட்சி வேட்பாளா்களின் மனுக்கள் ஏதும் தள்ளுபடியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.