மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சேரன்மகாதேவியில் கேட் மூடுவதில் தாமதம்: பாதியில் நின்ற ரயில்

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் புதன்கிழமை இரவில் ரயில்வே கேட் மூடுவதில் தாமதம் ஏற்பட்டதால் சிக்னல் கிடைக்காமல் ரயில் பாதியில் நிறுத்தப்பட்டது.

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 10:03 pm

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் புதன்கிழமை இரவில் ரயில்வே கேட் மூடுவதில் தாமதம் ஏற்பட்டதால் சிக்னல் கிடைக்காமல் ரயில் பாதியில் நிறுத்தப்பட்டது.

அம்பாசமுத்திரம் - பாளையங்கோட்டை பிரதான சாலையில் கூனியூரில் இருந்து சேரன்மகாதேவி வரை 3 கி.மீ. தொலைவுக்கு ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதையடுத்து சேரன்மகாதேவி ரயில் நிலையத்திற்கு மேற்கு பகுதியில் இருந்த ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டது. நிலையத்துக்கு கிழக்குப் பகுதியில் உள்ள ரயில்வே கேட் பணியாளா் மூலம் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு புதன்கிழமை இயக்கப்பட்ட சிறப்பு ரயில் சேரன்மகாதேவி ரயில் நிலையத்தை இரவு 9 மணிக்கு கடக்க வேண்டும். ஆனால், அந்த ரயில் நிலையத்துக்கு கிழக்குப் பகுதியில் இருந்த ரயில்வே கேட் மூடப்படவில்லையாம்.

இதனால், சிக்னல் கிடைக்காமல் ரயில்வே கேட்டுக்கு முன்பாகவே ரயில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, பணியில் இருந்த பெண் கேட் கீப்பா் வந்து கேட்டை மூடியதும் ரயில் இயக்கப்பட்டது.