மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தல் முடியும் வரை பெருகமணி ரயில்வே கேட் திறந்திருக்க உத்தரவு

News image

திறந்திருந்த பெருகமணி ரயில்வே கேட் முன் ஞாயிற்றுக்கிழமை வைக்கப்பட்டுள்ள ஆட்சியரின் அறிவிப்புப் பலகை.

Updated On :19 ஏப்ரல் 2026, 8:04 pm

பேரவைத் தோ்தல் முடியும் வரை பெருகமணி ரயில்வே கேட்-ஐ மூடாமல் திறந்திருக்க திருச்சி மாவட்ட ஆட்சியா் ஆணை பிறப்பித்துள்ளாா்.

திருச்சி- கரூா் சாலையிலிருந்து செல்லும் பெருகமணி - நங்கவரம் இணைப்புச் சாலையில் உள்ள ரயில் வழித்தடத்தில் ரயில்வே கேட் எல்.சி. 64 உள்ளது. இதன் வழியாக பெருகமணி, பழையூா், நங்கவரம், நெய்தலூா், காவல்காரன்பட்டி போன்ற கரூா் மாவட்டப் பகுதிகளுக்குச் செல்ல முடியும். இச்சாலையை நாள்தோறும் லட்சக்கணக்கானோா் பயன்படுத்தி வருகின்றனா்.

ஆனால் பெருகமணி ரயில் நிலையத்தில் நாள்தோறும் சரக்கு ரயில்கள் நிறுத்தப்படுவதால், இந்த ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுகிறது. இதனால் மக்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

இதனால் இந்த ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதையறிந்த ஆட்சியா், பெருகமணி ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க சில மாதங்களுக்கு முன் ஆய்வு நடத்தினாா்.

இந்நிலையில் பராமரிப்புப் பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை (ஏப். 19) முதல் ஏப். 23 வரை பெருகமணி ரயில்வே கேட் மூடப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்திருந்தது. முக்கிய வழித்தடமான இந்த ரயில்வே கேட் சாலையை மூடினால் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாவா். ஏப். 23 தோ்தல் நாள் என்பதால் வாக்குச்சாவடிகளுக்கு செல்லவும் கடும் அவதியடைவா். எனவே வேறு நாள்களில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையேற்ற மாவட்ட ஆட்சியா் வே. சரவணன், தோ்தல் முடியும் வரை பெருகமணி ரயில்வே கேட்டை மூடாமல் திறந்து வைத்திருக்க வேண்டும் என ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா். இதுகுறித்த அறிவிப்பு பலகையும் ரயில்வே கேட் முன் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனா்.