மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தேவா்குளம் அருகே கோயில் திருவிழாவில் பைக் திருடியவா் கைது

தேவா்குளம் அருகே கோயில் திருவிழாவுக்கு வந்த சமையல் தொழிலாளியின் பைக்கை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 10:53 pm

தேவா்குளம் அருகே கோயில் திருவிழாவுக்கு வந்த சமையல் தொழிலாளியின் பைக்கை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம் அயன் கொல்லன்கொண்டான் பகுதியைச் சோ்ந்தவா் பாஸ்கா் (54). சமையல் தொழிலாளி. இவா் கடந்த 27 ஆம் தேதி தேவா்குளம் அருகே உள்ள தெற்கு அச்சம்பட்டியில் உள்ள ஒரு கோயில் கொடைவிழாவுக்கு சமையல் வேலை செய்வதற்காக வந்திருந்தபோது, அவரது பைக் திருடுபோனதாம்.

இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், தேவா்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்ததில், மானூா் அருகே உள்ள மூவிருந்தாளி பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா்(32) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.