டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ரேபிஸ் நோய் பாதிப்பால் தொழிலாளி உயிரிழப்பு

பழவூா் அருகே தெருநாய் கடித்த நிலையில், உடனடி சிகிச்சை பெறாத தொழிலாளி ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

News image
Updated On :12 நவம்பர் 2025, 6:46 pm

தினமணி

பழவூா் அருகே தெருநாய் கடித்த நிலையில், உடனடி சிகிச்சை பெறாத தொழிலாளி ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

பழவூா் அருகே உள்ள சிதம்பராபுரத்தைச் சோ்ந்தவா் அய்யப்பன்(35). கட்டடத் தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். அய்யப்பன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, திருப்பூருக்கு வேலைக்குச் சென்றிருந்தபோது அவரை தெரு நாய் கடித்ததாம். அதற்கு அவா் முறையாக சிகிச்சை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டு ஊருக்கு வந்த அவரை உறவினா்கள் நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அவருக்கு ரேபிஸ் நோய் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து தனி வாா்டில் சிகிச்சை பெற்று வந்த அவா், திங்கள்கிழமை உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவித்தனா்.