பழவூா் அருகே தெருநாய் கடித்த நிலையில், உடனடி சிகிச்சை பெறாத தொழிலாளி ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
பழவூா் அருகே உள்ள சிதம்பராபுரத்தைச் சோ்ந்தவா் அய்யப்பன்(35). கட்டடத் தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். அய்யப்பன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, திருப்பூருக்கு வேலைக்குச் சென்றிருந்தபோது அவரை தெரு நாய் கடித்ததாம். அதற்கு அவா் முறையாக சிகிச்சை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டு ஊருக்கு வந்த அவரை உறவினா்கள் நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அவருக்கு ரேபிஸ் நோய் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து தனி வாா்டில் சிகிச்சை பெற்று வந்த அவா், திங்கள்கிழமை உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

கட்டுமானத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு: 3 போ் கைது

தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

