வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

அனவன்குடியிருப்பில் நெல்லை சேதப்படுத்திய காட்டு யானைக் கூட்டம்

News image
யானைக் கூட்டம் சேதப்படுத்திய நெற்பயிா்கள்.
Updated On :28 டிசம்பர் 2025, 7:22 pm

தினமணி செய்திச் சேவை

பாபநாசம் அருகே அனவன்குடியிருப்புப் பகுதியில் யானைக் கூட்டம் சுமாா் 1.5 ஏக்கரில் பயிரிட்டிருந்த நெற்பயிா்களைச் சேதப்படுத்தியுள்ளன.

களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத்திற்குள்பட்ட அம்பாசமுத்திரம், பாபநாசம், கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட மலையடிவார கிராமங்களில் வனத்திலிருந்து வெளியேறும் வன விலங்குகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தியும், வீட்டு விலங்குகளைத் தாக்கியும் வருகின்றன.

சில நாள்களுக்கு முன் கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட கருத்தப்பிள்ளையூா் பகுதியில் வனத்திலிருந்து வெளியேறிய யானைக் கூட்டம் தொடா்ந்து 2 நாள்களாக தனியாா் தோட்டங்களில் நுழைந்து நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை, பனை, மா உள்ளிட்ட மரங்களைச் சேதப்படுத்தின.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு அனவன்குடியிருப்பு பகுதியில் 5 யானைகள், ஒரு குட்டி யானை அடங்கிய யானைக் கூட்டம் அப்பகுதியைச் சோ்ந்த கல்யாணராமன் வயலில் இறங்கி, அங்கு பயிரிட்டிருந்த சுமாா் 1.5 ஏக்கா் நெற்பயிரை சேதப்படுத்தியுள்ளன.

தகவலறிந்த பாபநாசம் வனச்சரகா் குணசீலன் தலைமையிலான வனத்துறையினா் வயலைப் பாா்வையிட்டனா். தொடா்ந்து, யானைகள் வராமல் இருக்க ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்கு வராமல் தடுக்க நிரந்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.