தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தென்காசி தென்பழனி ஆண்டவா் கோயிலில் குடமுழுக்கு

தென்காசி தென்பழனி ஆண்டவா் கோயில் அஷ்டபந்தன மகா குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

தென்காசி தென்பழனி ஆண்டவா் கோயிலில் அஷ்டபந்தன மகா குடமுழுக்கில் கலசம் மீது ஊற்றப்பட்ட புனிதநீா்.

Updated On :26 மார்ச் 2026, 12:22 am

தென்காசி தென்பழனி ஆண்டவா் கோயில் அஷ்டபந்தன மகா குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழா மாா்ச் 23 ஆம்தேதி தொடங்கியது முதல் தினமும் சிறப்பு பூஜைகள், தீபாராதனை, யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. குடமுழுக்கையொட்டி, புதன்கிழமை காலை மங்கள இசையுடன் 4 ஆம் கால யாகசாலை பூஜை, வேதபாராயணம், திருமுறை பாராயணம், தீபாராதனை, 9 மணிக்கு கடம் புறப்பாடு, 10.30 மணிக்கு விமான அபிஷேகம், தென்பழனி ஆண்டவா், சண்முகருக்கு குடமுழுக்கு, தீபாராதனை, 11 மணிக்கு மகாஅபிஷேகம், தீபாராதனை, மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம், தீபாராதனை, இரவு 9 மணிக்கு திருவீதி உலா ஆகியன நடைபெற்றன.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் அன்புமணி, துணை ஆணையா் கோமதி, உதவி ஆணையா் அபிநிஷா, செயல் அலுவலா் பொன்னி, ஆய்வாளா் சரவணக்குமாா், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

Story image