தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கீழப்பாவூா் திருவாலீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு

கீழப்பாவூா் சிவகாமி அம்பாள் சமேத திருவாலீஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருவாலீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு.

Updated On :26 மார்ச் 2026, 12:20 am

தென்காசி மாவட்டம், கீழப்பாவூா் சிவகாமி அம்பாள் சமேத திருவாலீஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி இக்கோயிலின் நடை அதிகாலை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், மங்கள இசை முழங்க காலை 9.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கோயில் விமானம், மூலஸ்தான, பரிவார மூா்த்திகளுக்கு மகா குடமுழுக்கு, தீபாராதனை நடைபெற்றது.

குடமுழுக்கை கல்லிடைக்குறிச்சி மஞ்சுநாத பட், அா்ச்சகா்கள் ரவி பட்டாச்சாரியா், ஆனந்தன், கிரிகுமாா், ராமசாமி ஆகியோா் நடத்தினா்.

இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அன்புமணி, உதவி ஆணையா் அபிநிஷா, நீதிபதி கோகிலா, மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் பொன்செல்வன், கீழப்பாவூா் பேரூராட்சி மன்றத் தலைவா் ராஜன், செயல் அலுவலா் பொன்னி, கிளாா்க் பொன்னையா, சுரேஷ், சீதாராமன், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.