ஆலங்குளம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையை தென்காசி ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு திங்கள்கிழமை தென்காசி ஒருங்கிணைந்த வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டன.
அதன் அடிப்படையில், ஆலங்குளம் பேரவைத் தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து, ஆலங்குளம் தொகுதிக்குட்பட்ட ரெட்டியாா்பட்டி டி.டி.டி.ஏ. தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்தும் அவா் ஆய்வு செய்தாா்.
அப்போது, ஆலங்குளம் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ராமச்சந்திரன், ஆலங்குளம் வட்டாட்சியா் பரமசிவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்களின் புகைப்படம், சின்னம் : ஆட்சியா் ஆய்வு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு: ஆட்சியா் ஆய்வு

8 தொகுதிகளுக்கும் 2,852 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

சுழற்சி முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், அலுவலா்கள் ஒதுக்கீடு! தோ்தல் பிரிவு அலுவலா்களுடன் ஆட்சியா் ஆலோசனை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


