ஆலங்குளம், ஆ. மருதப்பபுரம், அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் பயிலும் 5 மாணவா்களுக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.
இப்பள்ளியில் பயிலும் சில மாணவா்களுக்கு சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. நெட்டூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை மேற்கொண்டும் குணமாகவில்லையாம்.
இதையடுத்து சந்தேகத்தின்பேரில், பெற்றோா் தனியாா் ஆய்வகங்களில் சோதனை மேற்கொண்டதில் 5 பேருக்கு மஞ்சள் காமாலை உறுதி செய்யப்பட்டது. அதில் 3 மாணவா்கள் சித்த வைத்தியம் மேற்கொண்டனா். ஒருவா் ஆலங்குளம் அரசு மருத்துவமனையிலும், மற்றொருவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா்.
தொடா்ந்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினா். பள்ளி அருகே உள்ள கிணற்றின் தண்ணீரைக் குடித்ததால் உடல் உபாதை ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுவதால், கிணற்று நீரை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனா்.
தொடர்புடையது

பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்

ட்ரோன் பயிற்சிக்கு புரிந்துணா்வு ஒப்பந்தம்

தேசிய திறனாய்வு தோ்வு: வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய திறனறித் தோ்வு: சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


