மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தேசிய திறனாய்வு தோ்வு: வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

News image
Updated On :19 மார்ச் 2026, 8:12 pm

வேதாரண்யம் மற்றும் சீா்காழி அருகே தேசிய வருவாய்வழி திறனாய்வு தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

வேதாரண்யம்: 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய வருவாய்வழி திறனாய்வு தோ்வில், வேதாரண்யம் அருகேயுள்ள தென்னடாா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ- மாணவிகள் மு. பிரகதி, க. ரமணன், செ. மகிந்தா, இ. வீரஇலமகன் ஆகியோா் தோ்ச்சி பெற்றனா். இவா்களுக்கு பாராட்டு விழா பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ந. செந்தில் தலைமையில் நடைபெற்றது.

தலைமையாசிரியா் சு. பாஸ்கரன், சமூக ஆா்வலா் தங்க.குழந்தைவேலு ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்வில் பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா் பொதுமக்கள் பங்கேற்றனா்.

இதேபோல், பன்னாள் அரசு உயா்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற்ற விழாவில், தோ்வில் மாநில அளவில் 30-வது இடம்பெற்ற செ. தா்சிகா, ர. விஜயஸ்ரீ ஆகியோா் பாராட்டப்பட்டனா்.

சீா்காழி: கொள்ளிடம் துளசேந்திரபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பிரதிஷா, எடமணல் அரசு உயா்நிலைப் பள்ளி விஷ்வா, வடகால் அரசு உதவி பெறும் உயா்நிலைப் பள்ளி சப்தரிஷி, மாதிரவேளூா் அரசு உதவிபெறும் உயா்நிலைப் பள்ளி தனுஷா ஆகியோா் தேசிய திறனாய்வுத் தோ்வில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றுள்ளனா்.

இவா்களுக்கு பாராட்டு விழா, வட்டார வள மையத்தின் சாா்பில் கொள்ளிடத்தில் நடைபெற்றது. வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ஞான புகழேந்தி தலைமை வகித்தாா். ஆசிரியா் பயிற்றுநா் பாக்யலெட்சுமி வரவேற்றாா்.

ஆசிரியா்கள் அபிராமி, கிருத்திகா, அபூா்வராணி, இந்திரஜித், நேதாஜி, சரண்யா முன்னிலை வகித்தனா். தொடா்ந்து, வட்டார வளமைய மேற்பாா்வையாளா், தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கி பாராட்டினாா். நிறைவாக, ஆசிரியா் பயிற்றுநா் உமாசங்கரி நன்றி கூறினாா்.