தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

புளியங்குடி அருகே போக்ஸோவில் வியாபாரி கைது

தென்காசி மாவட்டம் புளியம்பட்டி அருகே போக்ஸோவில் வியாபாரி கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :11 மார்ச் 2026, 8:09 pm

தென்காசி மாவட்டம் புளியம்பட்டி அருகே போக்ஸோவில் வியாபாரி கைது செய்யப்பட்டாா்.

கரைகொண்டாா்குளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் மகேந்திரன் (25). நுங்கு வியாபாரி. இவா், அதே பகுதியைச் சோ்ந்த பத்தாம் வகுப்பு மாணவியுடன் பழகி வந்ததுடன், அவரை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றினாராம். இதுதொடா்பான புகாரின் பேரில், புளியங்குடி மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து மகேந்திரனை கைது செய்தனா்.