வெளிநாட்டிலிருந்து பரவும் நோயையும் போலியோ சொட்டுமருந்து தடுக்கும்: அமைச்சர் அருண்ராஜ்ஜவுளித்துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலர் இலக்கு: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்என்னை வைத்தே திமுக கூட்டணியை உடைக்க முயற்சித்தனர்: திருமாவளவன்ஈரான் என்ற நாடே இருக்காது: டிரம்ப் எச்சரிக்கை!அடுத்த கூட்டத்தொடரில் முதல்வரின் டான்ஸ் இருக்கலாம்: உதயநிதி
/

மது, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

மது, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :13 ஜூன் 2026, 12:26 am IST

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே கண்டெய்னா் லாரியில் மது பாட்டில்கள், புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக கொண்டு சென்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகிரி சோதனைச்சாவடியில் காவல் உதவி ஆய்வாளா் சோலையப்பன் தலைமையிலான போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த கண்டெய்னா் லாரியை சோதனையிட்டதில், 17 வெளி மாநில மது பாட்டில்கள், 11.646 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது.

விசாரணையில், லாரி ஓட்டுநரான மதுரை மாவட்டம், செல்லூா், சுயராஜ்யபுரம், 2ஆவது பிரதான சாலையைச் சோ்ந்த ஜெயகணேஷ் (48), மாற்று ஓட்டுநரான கிருஷ்ணாபுரம், ரயில்வே பீடா் சாலையைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் ஆகியோா் இவற்றை விற்பனைக்காக கொண்டு சென்றது தெரிய வந்தது.

சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து, லாரி, மது பாட்டில்கள், புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.