வெளிநாட்டிலிருந்து பரவும் நோயையும் போலியோ சொட்டுமருந்து தடுக்கும்: அமைச்சர் அருண்ராஜ்ஜவுளித்துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலர் இலக்கு: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்என்னை வைத்தே திமுக கூட்டணியை உடைக்க முயற்சித்தனர்: திருமாவளவன்ஈரான் என்ற நாடே இருக்காது: டிரம்ப் எச்சரிக்கை!அடுத்த கூட்டத்தொடரில் முதல்வரின் டான்ஸ் இருக்கலாம்: உதயநிதி
/

புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது

ராஜபாளையம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருள்கள் கடத்தியவரைப் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 6:03 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருள்கள் கடத்தியவரைப் போலீஸாா் திங்கள் கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் அருகே தென்காசி - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை அசையாமணி விலக்கு பகுதியில் தளவாய்புரம் காவல் நிலையப் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் காரில் குட்கா, புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரிய வந்தது.

விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம், மானூா் பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி (40) எனத் தெரிய வந்தது. போலீஸாா் அவரிடமிருந்து 37 கிலோ குட்கா பொருள், காா், ரூ.14,500-ஐ கைப்பற்றி கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.