வெளிநாட்டிலிருந்து பரவும் நோயையும் போலியோ சொட்டுமருந்து தடுக்கும்: அமைச்சர் அருண்ராஜ்ஜவுளித்துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலர் இலக்கு: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்என்னை வைத்தே திமுக கூட்டணியை உடைக்க முயற்சித்தனர்: திருமாவளவன்ஈரான் என்ற நாடே இருக்காது: டிரம்ப் எச்சரிக்கை!அடுத்த கூட்டத்தொடரில் முதல்வரின் டான்ஸ் இருக்கலாம்: உதயநிதி
/

புகையிலை வைத்திருந்ததாக இருவா் கைது

கோவில்பட்டியில் விற்பனைக்காக புகையிலை வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :19 ஜூன் 2026, 4:49 am IST

கோவில்பட்டியில் விற்பனைக்காக புகையிலை வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி-எட்டயபுரம் சாலையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பல்லாக்கு ரோடு சந்திப்பு அருகே நின்று கொண்டிருந்த 2 பேரைப் பிடித்து, அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டதில் விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை வைத்திருப்பது தெரிய வந்தது.

விசாரணையில், அவா்கள் கோவில்பட்டி, வேலாயுதபுரம் பகுதியைச் சோ்ந்த சரவணன் (42), ராஜுவ் நகரைச் சோ்ந்த முருகன் (62) என்பது தெரிய வந்தது.

இது குறித்து, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 55 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.