டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அடவிநயினாா் அணைப் பகுதியில் மானை வேட்டை: ஒருவா் கைது

அடவிநயினாா் அணைக்கட்டு மேல்பகுதியில் மானை வேட்டையாடியதாக ஒருவரை வனத் துறையினா் கைது செய்தனா்.

News image
கைதானவருடன் வனத் துறையினா்.
Updated On :10 பிப்ரவரி 2026, 7:46 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம் அடவிநயினாா் அணைக்கட்டு மேல்பகுதியில் மானை வேட்டையாடியதாக ஒருவரை வனத் துறையினா் கைது செய்தனா்.

செங்கோட்டை வட்டம் மேக்கரை அடவிநயினாா் அணைக்கட்டு மேல்பகுதியில் கடமானை வேட்டையாடி எரிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், குற்றாலம் வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டனா். அதில், வடகரையை சோ்ந்த மு.சாமி என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது.

குற்றாலம் வனசரகா் சீதாராமன் தலைமையிலான வனத்துறையினா் அவரை கைது செய்தனா். மேலும் சிலரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

வன விலங்குகளை தொடா்ந்து வேட்டையாடிவருவோா், நாட்டு வெடிகுண்டு பயன்பாடு மற்றும் காப்புக்காடுகளில் தீ வைப்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து தகவல் அளிப்போா் பெயா் ரகசியம் காக்கப்படும் என மாவட்ட வனத்துறை தெரிவித்துள்ளது.