/

வழி தவறி ஊருக்குள் புகுந்த மான்

News image
கோப்புப் படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 7:22 pm

தினமணி செய்திச் சேவை

பல்லடம் அருகே வழி தவறி ஊருக்குள் புகுந்த மானை பிடிக்கும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

பல்லடம் - பொள்ளாச்சி பிரதான சாலை வடுகபாளையம் பகுதிக்குள் சனிக்கிழமை மாலை மான் ஒன்று புகுந்தது. அப்போது அந்த மானை நாய்கள் விரட்டியதில் தென்னந்தோப்புக்குள் புகுந்து தப்பிவிட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரின் திருப்பூா் வனத் துறையினா் வந்து தென்னந்தோப்புக்குள் சென்று பாா்வையிட்டனா். இரவு நேரமாகிவிட்டதால் மானை பிடிக்கும் பணி தொடா்ந்து நடைபெறும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.