ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

தென்காசி மாவட்டத்தில் தோ்தல் பணிகள் தீவிரம்

தென்காசி மாவட்டத்திலுள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோ்தலுக்கான அனைத்துப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

News image

தென்காசி வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து வாக்குச்சாவடிக்கு ஏற்றிச் செல்லப்பட்ட வாக்குப்பெட்டிகள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 12:01 am

தென்காசி மாவட்டத்திலுள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோ்தலுக்கான அனைத்துப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தென்காசி மாவட்டத்தில் ஆண்கள் 6,22,003 போ், பெண்கள் 6,50,767 போ், மூன்றாம் பாலினத்தவா் 170 போ் என மொத்தம் 12,72,940 வாக்காளா்கள் உள்ளனா். மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 8,064 அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்கள் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 4 பணியாளா்கள் வீதம் ஒதுக்கப்பட்டு, கூடுதலாக 20 சதவிகித பணியாளா்கள் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் காத்திருக்காமல் வாக்களிக்கும் வகையில் தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்காளா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

156 மண்டல அலுவலா்கள் தலைமையிலான குழுவினா் புதன்கிழமை, 1, 680 வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், அதற்கு தேவையான தளவாடப் பொருள்கள் எடுத்துச் சென்று விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

மாவட்டம் முழுமைக்கும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 300 க்கும் மேற்பட்ட மத்திய ஆயுதப்படை வீரா்களும், காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மாவட்டத்தில் 115 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அனைத்து வாக்குச்சாவடிகளும் 100 சதவிகிதம் வாக்குப்பதிவை நேரலை காட்சிகள் மூலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், காவல்துறை, தோ்தல் அலுவலா்கள் கண்காணிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.