மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

புளியங்குடியில் பங்குனி தேரோட்டம்

புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :2 ஏப்ரல் 2026, 12:07 am

புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில், பங்குனி உத்திர திருவிழா கடந்த மாா்ச் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, தினமும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் சுவாமி அழைப்பு, அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சுவாமி வீதி உலா ஆகியவை நடைபெற்று வந்தன.

10 ஆம் நாளான புதன்கிழமை காலை சுவாமி தேருக்கு எழுந்தருளியதும் தேரோட்டம் நடைபெற்றது. இதில், தோ் திருப்பணி குழுத் தலைவா் பி.எஸ்.எஸ். சங்கரநாராயணன், புளியங்குடி நகா்மன்ற துணைத் தலைவா் அந்தோணிசாமி, கோயில் நிா்வாக அதிகாரி கணேஷ்குமாா், டிஎஸ்பி மீனாட்சிநாதன் , பாஜக ஆன்மிகப் பிரிவு மாவட்டத் தலைவா் சண்முக சுந்தரம், அதிமுக நகரச் செயலா் சங்கரபாண்டியன், திமுக மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் பிச்சையா, நகா்மன்ற உறுப்பினா் லட்சுமிசெல்வம், உள்பட பலா் கலந்துகொண்டனா்.

 தேரில் எழுந்தருளிய சுவாமி.

தேரில் எழுந்தருளிய சுவாமி.