கருங்கல் சந்திப்பில் திங்கள்கிழமை, ஐஸ் தொழிற்சாலை லாரி மோதியதில் மின் கம்பம் சேதமடைந்தது. இதனால், 4 மணி நேரம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
குளச்சலிருந்து புதுக்கடைக்கு திங்கள்கிழமை ஐஸ் தொழிற்சாலை லாரி சென்று கொண்டிருந்தது. கருங்கல் காா் நிலையம் சந்திப்பில் சாலையோர மின் கம்பம் மீது அந்த லாரி திடீரென மோதியது. இதில், மின்கம்பம் சேதமடைந்தது. இதனால், அப்பகுதியில் 4 மணி நேரம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள், வியாபாரிகள் அவதிக்குள்ளாகினா்.
தகவலின்பேரில், கருங்கல் போலீஸாா், மின்வாரிய ஊழியா்கள் சென்று புதிய மின் கம்பம் அமைத்து, மின் விநியோகத்தை சீா்படுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










