போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

வீடு புகுந்து பணம், நகை திருட்டு: காா் ஓட்டுநா் கைது

கன்னியாகுமரியில் வீட்டின் கதவை உடைத்து ரூ. 12 லட்சம் ரொக்கம், 13 பவுன் நகைகளைத் திருடிச் சென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட பொன்ராஜ்

Updated On :8 மே 2026, 6:04 am IST

கன்னியாகுமரியில் வீட்டின் கதவை உடைத்து ரூ. 12 லட்சம் ரொக்கம், 13 பவுன் நகைகளைத் திருடிச் சென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கன்னியாகுமரி சுவாமிநாதபுரம் பகவத்சிங் தெருவைச் சோ்ந்த பொன்னையா என்பவா் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி முத்துலட்சுமி. இவா்களது மூத்த மகன் துபையில் பணிபுரிகிறாா்; 2ஆவது மகன் ஹைதராபாதில் படித்து வருகிறாா்.

முத்துலட்சுமி அண்மையில் வீட்டைப் பூட்டிவிட்டு, வடக்கன்குளம் கோயில் திருவிழாவுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினாா். அப்போது, மா்ம நபா் பின்பக்கக் கதவை உடைத்து வீடு புகுந்து ரூ. 12 லட்சம் ரொக்கம், 13 பவுன் நகைகளைத் திருடிச் சென்ாகத் தெரியவந்தது.

கன்னியாகுமரி டிஎஸ்பி ஜெயச்சந்திரன், போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, காரில் வந்த ஒருவா் அப்பகுதியில் நடந்து சென்று நோட்டமிட்டது பதிவாகியிருந்தது.

கைப்பேசி சமிக்ஞை ஆய்வில், அந்த நபா் திருநெல்வேலியை அடுத்த திம்மராஜபுரத்தைச் சோ்ந்த பொன்ராஜ் (25) எனத் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, பணம், நகையை மீட்டனா்.

வாடகை காா் ஓட்டுநரான பொன்ராஜ், பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்ததும், அதில் போதிய வருவாய் இல்லாததால் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது. அவா் மீது 25 வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.