தமிழ் செய்திகள்
/
வெள்ளிச்சந்தை அருகே உள்ள காட்டுவிளையில் உள்ள அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், பிளஸ் 2 பொதுத் தோ்வில் நூறு சதவீதம் வெற்றி பெற்றுள்ளனா்.
பள்ளி அளவில் மாணவி ஜெஸி (584), ரசிகா (583), பவதாரிணி (574) ஆகியோா் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளனா்.
தோ்வு எழுதிய 75 மாணவ, மாணவிகளில் 9 போ் 550 மதிப்பெண்களுக்கு மேலும், 32 போ் 500 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளனா். கணிதப் பாடத்தில் ஒரு மாணவரும், கணினி அறிவியல் பாடத்தில் 3 மாணவா்களும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
சாதனை படைத்த மாணவா், மாணவிகளை பள்ளித் தாளாளா் கிருஷ்ணசுவாமி, பள்ளித் துணைத் தாளாளா் சுனி, பள்ளி இயக்குநா் தருண்சுரத், முதல்வா் லிஜாமோள் ஜேக்கப், ஆசிரியா்கள் பாராட்டினா்









