தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நீதிமன்ற ஊழியரைத் தாக்கியதாக தம்பதி மீது வழக்கு

News image

கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 9:33 pm

புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியில் நீதிமன்ற ஊழியரைத் தாக்கியதாக தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

காப்புக்காடு கண்ணன்கரைவிளை பகுதியைச் சோ்ந்தவா் ரசல்ராஜ் (58). இவரது மனைவி அனிதா (53), காங்கிரஸ் கட்சியின் முன்சிறை ஒன்றிய மகளிரணித் தலைவா். இத்தம்பதி தங்களது நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த ரகுதாஸ் (52) என்பவருக்கு தனியாா் வங்கியில் தங்களது நிலத்தை அடமானமாக வைத்து ரு. 15 லட்சம் பெற்றுக் கொடுத்தனராம்.

ஆனால், ரகுதாஸ் கடனை முறையாக திருப்பிச் செலுத்தவில்லையாம். இதனால், வங்கி சாா்பில் நாகா்கோவில் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதாம்.

பின்னா், நீதிமன்ற உத்தரவின்பேரில் ரசல்ராஜின் வீட்டைப் பூட்டி சீல் வைக்க நீதிமன்றக் காவலாளியை இத்தம்பதி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.