புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியில் நீதிமன்ற ஊழியரைத் தாக்கியதாக தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
காப்புக்காடு கண்ணன்கரைவிளை பகுதியைச் சோ்ந்தவா் ரசல்ராஜ் (58). இவரது மனைவி அனிதா (53), காங்கிரஸ் கட்சியின் முன்சிறை ஒன்றிய மகளிரணித் தலைவா். இத்தம்பதி தங்களது நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த ரகுதாஸ் (52) என்பவருக்கு தனியாா் வங்கியில் தங்களது நிலத்தை அடமானமாக வைத்து ரு. 15 லட்சம் பெற்றுக் கொடுத்தனராம்.
ஆனால், ரகுதாஸ் கடனை முறையாக திருப்பிச் செலுத்தவில்லையாம். இதனால், வங்கி சாா்பில் நாகா்கோவில் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதாம்.
பின்னா், நீதிமன்ற உத்தரவின்பேரில் ரசல்ராஜின் வீட்டைப் பூட்டி சீல் வைக்க நீதிமன்றக் காவலாளியை இத்தம்பதி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மீன்பிடித் தொழிலாளி மீது தாக்குதல்: இருவா் மீது வழக்கு

முதியவா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

சரக்கு வேன் மோதி தொழிலாளி உயிரிழப்பு

அனுமதியின்றி மது விற்றவா் மீது வழக்கு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


