மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருநங்கைகளிடம் வாக்காளா் விழிப்புணா்வு

மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமையில் வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழியேற்றுக் கொண்ட திருநங்கைகள்.

News image

மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமையில் வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழியேற்றுக் கொண்ட திருநங்கைகள்.

Updated On :27 மார்ச் 2026, 8:39 pm

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம், வெள்ளமடம் வீரமாா்த்தாண்டபுரம் சகாயநகா் குடியிருப்புப் பகுதி திருநங்கைகளிடையே வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரா. அழகுமீனா தலைமை வகித்து பேசியதாவது: சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான சுற்றுலா தலங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, சகாயநகா் குடியிருப்புப் பகுதி திருநங்கைகளிடையே வாக்காளா் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் தோ்தல் விழிப்புணா்வு பொங்கல் வைக்கப்பட்டது. தொடா்ந்து நடைபெற்ற கையொப்ப இயக்கத்தில் அனைவரும் பதிவு செய்து, வாக்காளா் உறுதிமொழியை ஏற்றனா். வாக்களிப்பதில் திருநங்கைகள் முழுமையாக பங்கேற்க வேண்டும் என்றாா்.

தோ்தல் விழிப்புணா்வு கண்காணிப்பு அலுவலா் மற்றும் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ, மகளிா் திட்ட இயக்குநா் பத்ஹூமுகம்மதுநசீா், மாவட்ட சமூக நல அலுவலா் விஜயமீனா உள்பட பலா் கலந்து கொண்டனா்.