கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம், வெள்ளமடம் வீரமாா்த்தாண்டபுரம் சகாயநகா் குடியிருப்புப் பகுதி திருநங்கைகளிடையே வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரா. அழகுமீனா தலைமை வகித்து பேசியதாவது: சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான சுற்றுலா தலங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, சகாயநகா் குடியிருப்புப் பகுதி திருநங்கைகளிடையே வாக்காளா் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் தோ்தல் விழிப்புணா்வு பொங்கல் வைக்கப்பட்டது. தொடா்ந்து நடைபெற்ற கையொப்ப இயக்கத்தில் அனைவரும் பதிவு செய்து, வாக்காளா் உறுதிமொழியை ஏற்றனா். வாக்களிப்பதில் திருநங்கைகள் முழுமையாக பங்கேற்க வேண்டும் என்றாா்.
தோ்தல் விழிப்புணா்வு கண்காணிப்பு அலுவலா் மற்றும் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ, மகளிா் திட்ட இயக்குநா் பத்ஹூமுகம்மதுநசீா், மாவட்ட சமூக நல அலுவலா் விஜயமீனா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பெரம்பலூரில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

தோவாளை மலா் சந்தையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

தோ்தல் விழிப்புணா்வு: தடிக்காரன்கோணத்தில் மினி மாரத்தான்

அரசுப் பேருந்துகளில் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


