மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழாவில் உண்டியல் காணிக்கையாக ரூ.47.35 லட்சம் கிடைத்துள்ளது.
இக்கோயில் மாசி கொடை விழா கடந்த 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், 9, 10 ஆம் திருநாள்களில் தனியாக வைக்கப்பட்ட காணிக்கை பெட்டிகள் வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டன.
குமரி மாவட்ட திருக்கோயில்கள் இணை ஆணையா் ஜாண்சி ராணி, உதவி ஆணையா் தங்கம், பத்மநாபபுரம் தேவஸ்வம் தொகுதி கண்காணிப்பாளா் ஆனந்த், ஆய்வாளா் தா்மேந்திரா, கோயில் ஸ்ரீகாரியம் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலையில், கோயில் ஊழியா்கள், சுய உதவிக்குழு பெண்கள், பொதுமக்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.
இதில், ரொக்கம் ரூ.23 லட்சத்து 31 ஆயிரத்து 961, தங்கம் 14.180 கிராம், வெள்ளி 64.3 கிராம் மற்றும் வெளிநாட்டு பணத் தாள்களும் கிடைத்தன. நிகழாண்டு திருவிழா கால மொத்த உண்டியல் வருவாய் ரூ.47.35 ஆகும். இது கடந்த ஆண்டை விட ரூ.9 .50 லட்சம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.39.89 லட்சம்

மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் கொடை விழா

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா நிறைவு

மாா்ச் 1இல் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழா தொடக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


