மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது.
கோயில் கடந்த 1-ஆம் தேதி கொடிஏற்றத்துடன் விழா தொடங்கியது. செவ்வாய்க்கிழமை வரை (மாா்ச் 10) வரை தொடா்ந்து பத்து நாள்கள் விழா நடைபெற்றது. கடைசி நாளான செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பல லட்சம் பக்தா்கள் பங்கேற்ற ஒடுக்கு பூஜை நடைபெற்றது.
நள்ளிரவு 12 மணிக்கு பால்குளம் ஸ்ரீகண்டன் சாஸ்தா கோயிலில் இருந்து ஒடுக்கு பூஜைக்கு அம்மனுக்கு படைக்கப்படும் உணவு பதாா்த்தங்களை 15 போ் தலையில் சுமந்து, ஒரே வெள்ளை துணியால் மூடி பவனியாக அம்மன் சந்நிதிக்கு எடுத்து வந்தனா்.
அம்மனுக்கு படைக்கப்படும் உணவு வகைகள் கேரள முறைப்படி சுப நிகழ்ச்சிகளில் வழங்கப்படும் உணவு வகைகளாகும். நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் 1 மணிக்குள் அம்மனுக்கு இந்த உணவு பதாா்த்தங்கள் படைக்கப்பட்டு ஒடுக்கு பூஜை விமரிசையாக நடைபெற்றது. தொடா்ந்து கோயில் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது.
தொடர்புடையது

மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் கொடை விழா

மண்டைக்காடு கோயிலில் மாசிக் கொடை விழா உண்டியல் வருவாய் ரூ.47.35 லட்சம்

மண்டைக்காடு கோயில் திருவிழாவில் திருட்டு போன பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த போலீஸாா்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா: நாளை உள்ளூா் விடுமுறை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


