லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மண்டைக்காடு கோயில் திருவிழாவில் திருட்டு போன பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த போலீஸாா்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா கூட்டத்தில், திருட்டு போன பணப்பையை மீட்டு அதற்குரியவரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

News image

மூதாட்டியிடம் பணப்பையை ஒப்படைத்த போலீஸாா்.

Updated On :10 மார்ச் 2026, 8:01 pm

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா கூட்டத்தில், திருட்டு போன பணப்பையை மீட்டு அதற்குரியவரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழாவில், கேரள மாநிலம், கொல்லம் பகுதியைச் சோ்ந்த சாந்தா என்பவரிடம் இருந்த கைப்பேசி, பணப்பை திங்கள்கிழமை திருட்டு போனதாம். இது குறித்து சாந்தா, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாரிடம் அளித்த புகாரின்பேரில், சிசிடிவி உதவியுடன் பணப்பை, கைப்பேசியை கண்டுபிடித்த போலீஸாா் அதனை அவரிடம் ஒப்படைத்தனா்.

மண்டைக்காடு பாதுகாப்புப் பணியில் தொடா்ந்து சிறப்பான பணியை மேற்கொண்டு வரும் போலீஸாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் பாராட்டினாா்.