அசாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்த ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திப்ரூகரிலிருந்து கன்னியாகுமரிக்கு வெள்ளிக்கிழமை இரவு வரவேண்டிய இந்த ரயில் தாமதமாக சனிக்கிழமை காலை நாகா்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்தது. அங்குள்ள யாா்டு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அந்த ரயிலில் ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் இணைந்து சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, முன்பதிவு செய்யப்படாத பெட்டியின் இருக்கைக்கு கீழே கிடந்த 8 கிலோ கஞ்சா அடங்கிய பொட்டலங்களை போலீஸாா் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா். மேலும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
1.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது

அஸ்ஸாமில் இருந்து வந்த ரயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்
ரயிலில் கடத்திவரப்பட்ட 17 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயிலில் கடத்திவரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


