மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அஸ்ஸாமில் இருந்து வந்த ரயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

News image

ரயிலில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பண்டில்கள். - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 8:02 pm

அஸ்ஸாமில் இருந்து ஈரோடு வந்த ரயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அஸ்ஸாம் மாநிலம், திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஈரோடு ரயில் நிலையத்தில் நின்றது. அதில் ரயில்வே போலீஸாா் சோதனை செய்தபோது முன்பதிவற்ற பெட்டியில் கேட்பாரின்றி கிடந்த பை ஒன்றை சோதனை செய்தனா். அதில் 4 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை, ஈரோடு மதுவிலக்கு போலீஸில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ஈரோட்டுக்கு கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கஞ்சாவை கடத்தி வந்தது யாா்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.