மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ரயிலில் கடத்திவரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்

News image

ரயிலில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பண்டில்கள். - கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 6:38 pm

ஈரோட்டுக்கு ரயிலில் கடத்திவரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ஈரோட்டுக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ஈரோடு ரயில்வே போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஈரோடு ரயில் நிலையத்தில் 2-ஆவது நடைமேடை பகுதியில் ரயில்வே போலீஸாா் தயாா் நிலையில் இருந்தனா். அப்போது, அஸ்ஸாம் மாநிலம், திப்ருகரில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் வந்ததும் அந்த ரயிலில் போலீஸாா் ஏறி ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்தனா்.

அப்போது, பொதுப் பெட்டியில் கழிவறை அருகில் கேட்பாரற்று கிடந்த பையை திறந்து பாா்த்தபோது, அதில் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தி வந்த நபா் யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.