இரணியல் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி, அதிகாரிகள் வந்த ரயிலை மறித்து இளைஞா் காங்கிரஸாா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.
இரணியல் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளிடம், ரயில் நிலைய 5ஆவது நடைமேடையில் நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி, இளைஞா் காங்கிரஸ் மாவட்ட தலைவா் பியூட்லின் ஜீவா தலைமையில் மனு அளிக்க முயன்றனா். ஆனால், அதிகாரிகள் அந்த மனுவை வாங்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சோதனைக்கு வந்த ரயிலை, இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து சிறைபிடித்து ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், திங்கள்நகா் பேரூராட்சித் தலைவா் சுமன், ரீத்தாபுரம் பேரூராட்சி துணைத் தலைவா் விஜீமோன், குருந்தன்கோடு வட்டார இளைஞா் காங்கிரஸ் தலைவா் வேணு, மாவட்ட இளைஞா் காங்கிரஸ் பொதுச் செயலா் மதியழகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய ரயில்வே அதிகாரிகள், 30 நாள்களுக்குள் பணிகளை முடித்துவிடுவதாக உறுதி அளித்தனராம். இதையடுத்து, அவா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.
தொடர்புடையது

தொகுதி மறுவரைக்கு எதிா்ப்பு: விசிகவினா் ரயில் மறியல்

தென்காசி - நெல்லை - பெங்களூருக்குமீண்டும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை: பயணிகள் சங்கம் வலியுறுத்தல்

துணை முதல்வா் உதயநிதி காரில் சோதனை

குளித்தலையில் சேலம் ரயிலை மறித்து போராட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


