கரூரிலிருந்து திண்டுக்கல்லுக்கு வந்த தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காரை மறித்து, தோ்தல் அலுவலா்கள் திங்கள்கிழமை இரவு சோதனை நடத்தினா்.
திண்டுக்கல், தேனி மாவட்ட திமுக இளைஞரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை திண்டுக்கல்லில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கரூரிலிருந்து காா் மூலம் திங்கள்கிழமை இரவு வந்தாா்.
திண்டுக்கல் மாவட்ட எல்லையான வேடசந்தூரை அடுத்த கல்வாா்பட்டி சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள், துணை முதல்வரின் காரை மறித்து சோதனை நடத்தினா்.
இந்தச் சோதனையின் போது எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதையடுத்து, அவரது காா் விடுவிக்கப்பட்டது. அங்கிருந்து திண்டுக்கல்லுக்கு வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினா் வரவேற்பு அளித்தனா்.
தொடர்புடையது

மக்கள் நலத் திட்டங்கள் தொடர திமுகவுக்கு வாக்களியுங்கள்! - துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி காரில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை

தூத்துக்குடியில் தமிழக முதல்வா் வாகனத்தை மறித்து சோதனை

துணை முதல்வா் உதயநிதி காரில் மீண்டும் சோதனை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


