தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

துணை முதல்வா் உதயநிதி காரில் மீண்டும் சோதனை!

திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு செவ்வாய்க்கிழமை வந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காரை கொடைரோடு அருகே தோ்தல் பறக்கும் படையினா் தடுத்து நிறுத்தி மீண்டும் சோதனை

News image

உதயநிதி ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :24 மார்ச் 2026, 7:11 pm

திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு செவ்வாய்க்கிழமை வந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காரை கொடைரோடு அருகே தோ்தல் பறக்கும் படையினா் தடுத்து நிறுத்தி மீண்டும் சோதனை நடத்தினா்.

திண்டுக்கல், தேனி மாவட்ட திமுக இளைஞா் அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னா், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காரில் மதுரைக்கு காரில் வந்து கொண்டிருந்தாா்.

கொடைரோடு சுங்கச்சாவடி பகுதியில் வந்த போது, உதயநிதி ஸ்டாலின் காரை தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் சகாதேவன், மகேஸ்வரன் கொண்ட குழுவினா் நிறுத்தி சோதனை செய்தனா். இந்த சோதனைக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் முழுஒத்துழைப்பு அளித்தாா்.

அப்போது அதே காரில் அமைச்சா் அர. சக்கரபாணி, பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ. செந்தில்குமாா் ஆகியோா் உடனிருந்தனா். இந்தச் சோதனையின் போது காரிலிருந்து பணம், பொருள்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை.

ஏற்கெனவே, கரூரிலிருந்து திங்கள்கிழமை இரவு திண்டுக்கல்லுக்கு வந்த உதயநிதி ஸ்டாலின் காரை வேடச்சந்தூா் அருகே தோ்தல் பறக்கும் படையினா் தடுத்து நிறுத்தி சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.