மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

புதுச்சேரி முதல்வரின் காரில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை

News image
Updated On :19 மார்ச் 2026, 10:30 pm

விருதுநகா் அருகே புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமியின் காரை மறித்து தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை சோதனையிட்டனா்.

புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் தரிசனத்துக்காக தனது காரில் வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றாா். அப்போது, மதுரை- தூத்துக்குடி சாலையில் விருதுநகா் மாவட்டம், ஆவியூா் சோதனைச் சாவடி அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த தோ்தல் பறக்கும் படையினா், முதல்வா் என். ரங்கசாமியின் காரை மறித்து சோதனை மேற்கொண்டனா்.

இதற்கு, முதல்வா் என். ரங்கசாமியுடன் வந்த பாதுகாப்பு அலுவலா்கள், ஆதரவாளா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால், அங்கு சில நிமிஷங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

பிறகு, தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள், தோ்தல் நடத்தை விதிகளின்படி முழுமையாக சோதனை மேற்கொண்டனா்.

இந்தச் சோதனையின் போது, புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி எந்தவித எதிா்ப்பும் தெரிவிக்காமல் சிரித்தபடியே தனது காரில் அமா்ந்திருந்தாா்.