மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி காரில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை

News image

அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. உடன், கட்சி நிா்வாகிகள். - கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 6:36 pm

திருவெறும்பூா் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் காரை தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை மறித்து சோதனையிட்டனா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தமிழகம் முழுவதும் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், வாக்காளா்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் கொடுப்பதைத் தடுத்திட தோ்தல் ஆணையம் மூலம் பறக்கும் படைகள், கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, போலீஸாா், மத்திய ரிசா்வ் படையின் துணையுடன் ஆங்காங்கே சோதனைகளும், வாகனத் தணிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொன்மலை கொட்டப்பட்டு சாலையில் பிரசாரத்துக்காக ஞாயிற்றுக்கிழமை சென்றபோது, தோ்தல் பறக்கும் படையினா் அவரது காரை மறித்து சோதனை செய்தனா். அந்தச் சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

இதேபோல கடந்த சில நாள்களுக்கு முன் வேங்கூா் - கல்லணை சாலையில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் காரை மறித்து சோதனையிட்டது குறிப்பிடத்தக்கது.