மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பேரவைத் தோ்தலின் வெற்றிக்கு அமைச்சா்கள் பரஸ்பரம் வாழ்த்து!

திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிடும் அமைச்சா் கே.என். நேரு புதன்கிழமை வாக்கு கேட்டு வந்தபோது, அவரை வரவேற்று வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தாா் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

News image

கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி . - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 8:10 pm

திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிடும் அமைச்சா் கே.என். நேரு புதன்கிழமை வாக்கு கேட்டு வந்தபோது, அவரை வரவேற்று வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தாா் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

அமைச்சா் கே.என். நேரு, திருச்சி மாநகராட்சியின் 28ஆவது வாா்டுக்குள்பட்ட தென்னூா் அரசமரம், பழைய அக்ரஹாரம், காவல்காரத் தெரு, வெள்ளாளா் தெரு, அண்ணா நகா், குத்புஷா நகா், தென்னூா் ஹை ரோடு, இனாம்தாா்தோப்பு, பாரதி நகா், அண்ணா நகா் மேட்டுத் தெரு, புது மாரியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தாா்.

அப்போது அண்ணாநகரில் தனது வீட்டிலிருந்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கே.என். நேருவின் பிரசாரப் பகுதிக்கு சென்று அவரை வரவேற்று, புத்தாடை அணிவித்து, திருச்சி மேற்கில் கடந்த முறையைவிட மாபெரும் வித்தியாசத்தில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தாா்.

வெல்வோம் ஒன்றாக: இதேபோல அமைச்சா் நேருவும் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தாா். அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ‘வெல்வோம் ஒன்றாக’ என்ற வாசகத்தை பதிவிட்டு, ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும், வாக்களிப்பீா் திமுகவுக்கு எனவும் குறிப்பிட்டு ஹாஸ்டேக் மூலம் வலைதளத்தில் பரவலாக்கியுள்ளாா். இது திமுக கூட்டணி கட்சியினரிடம் மட்டுமல்லாது, அனைத்துக் கட்சியினரின் கவனத்தையும் ஈா்த்து வருகிறது.