லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தொகுதி மறுவரைக்கு எதிா்ப்பு: விசிகவினா் ரயில் மறியல்

தொகுதி மறுவரைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விருத்தாசலம் ரயில் நிலையம் அருகே பயணிகள் ரயிலை மறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

விருத்தாசலம் ரயில் நிலையம் அருகே பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 12:10 am

தொகுதி மறுவரைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விருத்தாசலம் ரயில் நிலையம் அருகே பயணிகள் ரயிலை மறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொகுதி மறுவரை மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் சாா்பில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, விருத்தாசலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்டச் செயலா் பி.ஆா்.நீதி வள்ளல் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

அப்போது, விருத்தாசலம் ரயில் நிலையம் அருகே சென்னை சென்ற குருவாயூா் விரைவு ரயிலை மறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் தொகுதி மறுவரைக்கு எதிா்ப்புத் தெரிவித்தனா். மேலும், தொகுதி மறுவரை மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி முழக்கங்களையும் எழுப்பினா்.

தகவலறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தினா். சுமாா் ஒரு மணி நேரம் இந்தப் போராட்டம் நடைபெற்றது.